Sunday, October 12, 2008

123 Test

123 test

Sunday, February 03, 2008

தை ஒன்னா? சித்திரை ஒன்னா? ரெண்டும் இல்லை.

சூரியன் மகர ரேகையைத் தொட்டுப் பின் கடக ரேகைக்கு திரும்பும் நாள் தான் தை மாதம் முதல் தேதி.இது மிகவும் சரியானது. பின்னர் சித்திரை மாதம் முதல் தேதிக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியம்?

இருக்கிறது.

அதாவது மகரரேகை இலங்கைக்குக் கீழே இந்தியப் பெருங்கடலில் இருக்கிறது. சூரியன் மகர ரேகையைத் தொட்டுவிட்டு வடக்கு நோக்கி நகர்ந்து குத்து மதிப்பாக இந்திய இலங்கைப் பகுதிகளைத் தொடும் நாள் சித்திரை ஒன்று. ஆகவே தான் சித்திரை ஒன்று புத்தாண்டாகக் கொண்டாடப் பட்டு வந்தது(இப்பத்தான் மாத்திட்டாங்களே :) ).

மிகச் சரியாகத் தமிழ்புத்தாண்டக் கொண்டாடுவது என்றால், கன்னியாகுமரியில் ஒருநாள், மதுரையில் ஒருநாள், சென்னையில் ஒருநாள் என்று வரும்.

ஆகவே ஊருக்கு ஊர் ஜோசியக் காரரைக் கேட்டு, சூரியன் அவரவர்களின் ஊரைக் கடக்கும் நாளையே புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பதே
சரி.

ரேகை பற்றிய விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். (கை ரேகை இல்லீன்ங்கண்ணா)

Saturday, January 05, 2008

நீ எம்.ஜி.ஆர் கட்சியா? கருணாநிதி கட்சியா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் வீட்டில் இணையத் தொடர்பு வாங்கி எழுதும் முதல் பதிவு.
சிவக்குமார் அவர்களின் இந்தப் பதிவு என்னுடைய பள்ளிப் பருவ நினைவகளைத் தூண்டிவிட்டது.

ஒன்றாம் வகுபுப் படிக்கும் போது என் வகுப்பு சக மாணவர்கள் கேட்டுக் கொள்வது நீ எம்.ஜி.ஆர் கட்சியா? கருணாநிதி கட்சியா? யாருக்கும் அப்போது கட்சி என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் எம்.ஜி.ஆர் நல்லவர் , கருணாநிதி கெட்டவர் என்று மட்டும் பேசிக்கொள்வார்கள். எல்லோருமே தாங்கள் எம்.ஜி.ஆர் கட்சி என்றே சொல்லிக் கொள்வார்கள். யாராவது ஓரிருவர் கருணாநிதி கட்சி என்றால் அவனையும் சேர்த்துக் கெட்டவன் என்றே சொல்லிக் கொள்வோம்.

ஏதோ ஒரு ஓட்டுப் பதிவின் போது பள்ளிக்கூடதின் அருகில் விளையாடச் சென்ற போது, சின்னப் பயலுக எல்லாம் இங்க வரக்கூடாதுடா, ஓடுங்கடா என்று விரட்டி விட்டார்க்கள்.

பிறகு ஒருமுறை, ராமநாதபுரத்தில் 'வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களை தேனீக்கள் விரட்டியடித்தன' என்ற செய்தியை என் அம்மாவிடம் சொல்ல ஆரம்பிக்கும் போது, அதனை முழுவதுமாகக் கேட்காமலேயே, இந்த வயசில உனக்கு ஏண்டா அரசியல் என்று என் அம்மா திட்டியதும் நினைவுக்கு வருகிறது.

1989 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலின் போது எங்கள் தொகுதியில் மக்களுக்கு விளக்க, மாதிரி வாக்குச் சீட்டுகளை ஒரு கட்சி அச்சடித்து, இந்த இடத்தில் முத்திரை குத்த வேண்டும் என்று விளக்கிக் கொண்டிருந்தார்கள். நான் அந்தச் சீட்டை தேர்தல் அன்று கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த போதுஉண்மையான வாக்குச் சீட்டு என நினைத்து சில கட்சிக்காரர்கள் யாருடா நீ, உனக்கு யாருடா இதைக் கொடுத்தா என மிரட்டியதும் நினைவுக்கு வருகிறது.

1999ம் ஆண்டு ராமநாதபுரம் நாடளுமன்றத் தொகுதி தேர்தலில் பவானி ராஜேந்திரன் அவர்களுக்கு ஓட்டுப் போட்ட போது, சீ! தேர்தல்னா இவ்வளவுதானா, என்று ஒரு சலிப்பும் வந்தது.