Sunday, April 30, 2006

Sorry, என்ன ரெம்ப கடிக்கிறேனா?

சோடாவ Fridgeல வச்சா Cooling சோடாஆகும், அதுக்காக அத Washing Macineலவெச்சா washing சோடாவாகுமா?

தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது

உலகம் தெரியாமவளர்ரவன் வெகுளி Cricketதெரியாம வெளையாடுறவன் Ganguly

என்ன தான் Karateல Black Beltவாங்கினாலும் சொறி நாய்தொறத்தினால் ஓடித்தான்ஆகனும்

என்ன தான் மீனுக்குநீந்த தெரிஞ்சாலும் அதாலமீன் கொழம்புல நீந்தமுடியாது

Quarter அடிச்சிட்டுகுப்புற படுக்கலாம் ஆனாகுப்புற படுத்துட்டு Quarterஅடிக்க முடியாது

நீஎவ்வளவு பெரிய Dancerஆஇருந்தாலும் உன் சாவுக்குஉன்னால ஆட முடியுமா?

பணம்வரும் போகும் பதவி வரும்போகும் காதல் வரும் போகும்கவலைவரும் போகும் ஆனா AIDSவரும், போகாது!!

Poison பத்துநாளானாலும் பாயசம் ஆகமுடியாது ஆனா பாயசம் பத்துநாளானா Poison ஆகிடும்

வாயால"நாய்" ன்னு சொல்ல முடியும் நாயால "வாய்"ன்னு சொல்லமுடியுமா?

Cycle Carrierல Tiffin வைக்கமுடியும் ஆனா Tiffin Carrierல Cycleவைக்க முடியுமா?

Bus போனாலும்Bus Stand அங்கேயே தான்இருக்கும் ஆனா Cycle போனா Cycle Stand கூடவே போகும்

Train எவ்வளவுவேகமா போனாலும் கடைசிபெட்டி கடைசியா தான் வரும்

Ticket வாங்கிட்டு உள்ளேபோகுறது Cinema Theatre, உள்ளேபோயிட்டு Ticket வாங்குறது Operation Theatre

Busலநீ ஏறினாலும் Bus உன் மேலஏறினாலும் Ticket வாங்க போறதுநீதான்

Chair ஒடைஞ்சா உட்காரமுடியாது கட்டில் ஒடைஞ்சாபடுக்க முடியாது ஆனாமுட்டை ஒடைஞ்சா தான் Omlet போடமுடியும்

காக்கா என்ன தான்கறுப்பா இருந்தாலும் அதுபோடுற முட்டை வெள்ளைமுட்டை என்ன தான் வெள்ளையாஇருந்தாலும் அதுக்குள்ளஇருக்குற காக்கா கறுப்புதான்


யப்பா, மெயில்ல இதப் படிச்ச வொடனே, இப்படிக் கண்ணக்கட்டுதே!!

Saturday, April 29, 2006

நிலவு ஒரு பெண்ணாகி

பெண்களை ஏன் நிலவிற்கு ஒப்பிட்டார்கள் என்ற சந்தேகம் இந்தப் படங்களைப் பார்த்தும் தீர்ந்து விட்டது. வலைப் பதிவு மக்களே நிலவு பற்றிய கவிதைகளை எடுத்து விடுங்கள்.

நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ..

பாதிமுகம் மறைத்த நிலவே
ஒரு பார்வை பார்க்க மாட்டாயோ
தூரத்தில் இருக்கும் நிலவே
நீ எனைக்கண்டு தூர விலகிப் போவதும் ஏனோ
முதல் முறையாக ஒரு கவிதை முயற்சித்தேன் உனக்காக
பாதிமுகம் மறைத்த நிலவே
ஒரு பார்வை பார்க்க மாட்டாயோ






கவிதை எழுதுவதும் ஒரு சுகமாகத்தான் இருக்கிறது. மேலும் முயற்சிக்கிறேன்.

காய்கறிக்கடை அனுபவங்கள் - 2

கலப்படம். இது இரண்டு வகைப்படும். ஒன்று தரமான ஒரு பொருளுடன் அதனைவிடத் தரம் குறைந்த அதே பொருளைக் கலந்து விற்பது. மற்றொன்று ஒரு பொருளுடன் அதே நிறம் அல்லது மணம் அதே போன்ற தன்மையுடைய வேறு ஒரு பொருளைக் கலந்து விற்பது ஆகும்.

முதலாவதில் நுகர்வோருக்கு எதுவும் உடல் ரீதியான பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால் தரம் குறைந்த ஒரு பொருளை தரமான பொருளின் விலையில் வாங்குகிறார். நான் பார்த்தவரையில் எல்லாப் பொருட்களிலும் இந்த வகைக் கலப்படம் செய்யப்பட்டது. இல்லையென்றால் வியாபாரத்தில் போட்டியைச் சமாளிக்க முடியாது என்பது என் முதல்லளியின் எண்ணம்.

இரண்டாவதில் லாபம் மட்டுமே நோக்கம். கடலை எண்ணையில் விளக்கெண்ணையைக் கலப்பது போன்ற செயல்கள். இதில் கலப்பட அளவு என்பது மிகவும் முக்கியம். 15கிலோ கடலை எண்ணையில் ஒன்னேகால் கிலோ வரை விளக்கெண்ணை கலந்தால் அதைக் கண்டுபிடிக்க முடியாது. ஒரு முறை மனசாட்சிக்குப் பயந்து விளக்கெண்ணை கலப்பது பாவம் இல்லையா முதலாளி என்று கேட்டுவிடேன். அதெல்லாம் இல்லப்பு, விளக்கெண்னை நல்ல மலமிளக்கி. அதனால் உடலுக்கு மிகவும் நல்லது என்று சப்பைக்கட்டு கட்டினார்.

இனிப்புத் தன்மை அதிகமாக உள்ள முதல் தர சர்க்கரையில்(சீனி), இனிப்புத்தன்மை குறைந்த சர்க்கரையைக் கலப்பது,கடுகில் ஆர்கிமோன் விதைகளைக் கலப்பது, நெய்யில் வனஸ்பதியைக் கலப்பது போன்றவை நான் சாதாரணமாகக் கண்ட கலப்படங்கள்.

இது போன்ற கலப்படங்கள் பெரும்பாலும் 100கிராம், 50 கிராம் என்று வாங்கும் அன்றாடம் காய்ச்சி மக்களைக் குறிவைத்துதான்.

சென்னையில் நான் இருந்த போது சில பெரிய கடைகளில் பாக்கெட்டில் அடைத்து வைத்திருக்கும் பொருட்களில் நான் இது போன்ற கலப்படங்களைப் பார்த்தது இல்லை. ஆனால் அவற்றின் விலையும் சற்று அதிகம்தான். காசுக்கேற்ற தரம்.

முடிந்தவரை தெருவோரக் கடைகளில் விற்கும் மிக்சர், பக்கோடா போன்ற எண்ணைப் பலகாரங்களை வாங்கி உண்ணாதீர்கள். அவைகள் அனைத்தும் கலப்பட எண்னை, மற்றும் மாவுப் பொருட்களில் செய்யப்பட்டவை.

என் முதலாளியிடம் எனக்குப் பிடித்தது, ஒரு மாதச் சம்பளமாக 350 ரூபாய் கொடுத்தார். கொடுக்கும் போது சாப்பிட்ட பேரீச்சம் பழங்களுக்கெல்லாம் கணக்குப் பார்த்தால் நீதாம்பு காசு தரணும். ஒரு வாட்ச் வாங்கனுமுன்னு சொன்னீயே, இத வச்சி வாங்கிக்கோன்னு சொன்னார். தொழிலாளிகளிடம் வேலை வாங்கத் தெரிந்த மனிதர்.

ஒரு மாதம் மளிகைக்க்டையில் இருந்து நான் தெரிந்து கொண்டவைகள்தான் இவைகள். அடுத்த பதிவு என் காய்கறிக்கடையில் இருந்து.

Monday, April 24, 2006

காய்கறிக்கடை அனுபவங்கள் - 1

செய்யும் தொழிலே தெய்வம். இதை மிகவும் நம்புபவன் நான். இன்று ஒரு கணிப்பொறியாளராக இருக்கும் நான் மளிகைக்கடையிலும், காய்கறிக்கடையிலும் வேலை செய்திருக்கிறேன் என்று சிலரிடம் சொல்லும் போது சிலர் அப்படியா என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள். சிலர் முகம் சுளித்திருக்கிறார்கள். எப்போதும் அதுபற்றிக் கவலைப் பட்டதில்லை.
இந்தத் தொடரில் நான் வேலை செய்த இடங்களில் சந்தித்த புத்திசாலியான வியாபாரிகள், ஏமாற்ற நினைக்கும் வியாபாரிகள், கிராமத்து விவசாயிகளின் கஷ்டங்கள், வியாரிகளின் பொதுவான தகிடுதத்தங்கள் ஆகியன பற்றி நேரம் கிடைக்கும் போது சுருக்கமாக எழுதுகிறேன். ஆதரவை வேண்டுகிறேன்.

நான் பதினென்றாம் வகுப்பின் முழு ஆண்டு விடுமுறையின் போது எல்லோரும் கோச்சிங் கிளாஸ் போய்க் கொண்டிருந்த போது நான் மட்டும் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சென்றேன். அது குடும்பச் சூழ்நிலையால் அல்ல. பன்னிரண்டாம் வகுப்பிற்கு கோச்சிங் எல்லாம் தேவையில்லை, சாதாரணமாகவே படிக்க முடியும் என்ற தன்னம்பிகைதான். படிப்பிலும் பள்ளியில் மூன்றாவது ரேங்க் வாங்கிக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் தராசு பிடிக்கக் கற்றுக் கொண்டேன். அது ஒரு மொத்த வியாபாரம் செய்யப்படும் மளிகைக்கடை. என் பக்கத்து வீட்டுக்காரரின் கடை. எனவே சம்பளம் எல்லாம் பேசவில்லை. தினமும் இரண்டு ரூபாய் பேட்டாக் காசாகக் கொடுப்பார்கள். வேலையெல்லாம் எனக்கு எளிதான வேலை தான். ஒரு கிலோ இரண்டுகிலோ போன்ற சிறிய அளவிளான நிறுவைகளை நான் நிறுத்துக் கொடுப்பேன். ஆனால் அதைப் பொட்டலமாக மடிக்கத் தெரியாது. வேறு சில வேலைக்காரர்களை வைத்துச் செய்வார் என் முதலாளி.

கடையின் மாடியில் தான் டால்டா,நெய், பேரீட்சை போன்ற பொருட்களை ஸ்டாக் வைத்திருப்பார்கள். பேரீட்சை பாக்கெடுகளை ஒரு மூலையில் கோணிப்பைகளுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்து அவ்வப்போது மாடிக்குப் போகும் போது தின்றுவிட்டு வருவேன்.

கைத்தராசில் நிறுக்கும் போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். நமக்கே தெரியாமல் குண்டுஏறிவிடும். அதாவது தராசின் சங்கிலி மேலை உள்ள சட்டத்தில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளும். அதை நாம் அவசரத்தில் கவனிக்காவிட்டால் சில நேரம் லாபம் நமக்கு அல்லை யென்றால் வாங்குபவருக்கு. அதாவது தராசுச் சட்டத்தின் சங்கிலி, படிக்கல்(எடைக்கல்) உள்ள பக்கத்தில் சுற்றிக் கொண்டால் போட்ட எடைக்கு அதிகமான பொருள் நிற்கும். அப்போது நஷ்டம் நமக்கு. அதே நேரம் தராசுச் சட்டத்தின் சங்கிலி பொருள் உள்ள பக்கத்தில் சுற்றிக் கொண்டால் போட்ட எடைக்கு குறைவான பொருள் நிற்கும். அப்போது வாங்குபவர் ஏமார்ந்து போவார்.

சில நேரங்களில் பேருந்து நிறுத்தங்களில் வியாபாரம் செய்பவர்கள் அரைக்கிலோ பொருளின் விலை மிகவும் மலிவாகக் கொடுப்பதாகச் சொல்லுவார்கள். அவரின் தராசைப் பார்த்தால் நான் மேலே சொன்ன மாதிரி தராசுத் தட்டின் சங்கிலி மேலே சுற்றிக் கொண்டிருக்கும். பொருளின் எடை சுமார் ஒரு கிலோவிற்கு 300 கிராம் வரை குறைவாக இருக்கும். என்வே அடுத்த முறை காய்கறிகள், பழங்கள் நிறுத்து வாங்கும் போது கவனித்து வாங்குங்கள்.

கோவை காந்திபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நாள் நின்று கொண்டிருந்த போது ஒருவர் திராட்சைப்பழம் அரைக்கிலோ 5 ரூபாய்க்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் தாராசில் நான் மேற்கூறிய பித்தலாட்டத்தைச் செய்து வைத்திருந்தார். அவர் நிறுக்கும் போது அதைச் சரி செய்து அரைக்கிலோ தரும்படிக் கேட்ட போது, வியாபாரம் நடக்குற இடத்தில் பிரச்சனை பண்ணாதப்பா என்று அடிக்காத குறையாகத் துரத்திவிட்டார்கள்.

இன்னும் வரும்....

Sunday, April 23, 2006

கலைஞருக்கு சில கேள்விகள்

கலைஞருக்கு சில கேள்விகள். இதற்கு கலைஞரோ அவரது தொண்டர்களோ சரியான பதில் தந்து விட்டால் என் குடும்பத்தினரை தி.மு.க விற்கு ஓட்டுப் போடும்படிக் கேட்டுக் கொள்வேன்.

1. பா.ஜ.க கூட்டணியில் 5 ஆண்டுகள் மாறன் சாகும் வரை பதவியில் இருந்து விட்டு கூட்டணியில் இருந்து விலகியது ஏன்?

2. ராஜபாளயம் பொதுக் கூட்டத்தில் நெசவாளர்களுக்கு பா.ஜ.க வாஜ்பாய் அரசு பல துன்பங்களைக் கொடுத்தது எனக் கூறினீர்கள். நீங்களும் தானே அரசில் 5 ஆண்டுகள் பங்கெடுத்தீர்கள். அந்தக் கொடுமைகளுக்கு நீங்களும் ஒரு காரணம் என்று கூறுகிறேன். என்ன பதில்?

3.சுமங்கலி கேபிள் டீ.வி விவகாரத்தில், அவசரமாக கட்சி எம்.பிக் களுடன் கவர்னரைச் சந்தித்தது ஏன்?. மேலும் பாலாறு அனை விவகாரம் தொடர்பாக நீங்கள் மத்திய அரசில் இருந்து கொண்டு என்ன செய்திருக்கிரீர்கள்?

4.அறிவாலயத்தை அடமாணம் வைத்து சன் டீ.விக்காக வங்கியில் கடன் வாங்கினீர்கள் என்ற வை.கோ வின் குற்றச்சாட்டிற்கு உங்களின் பதில் என்ன?(என் அப்பா 1982ம் ஆண்டில் தி.மு.க உறுப்பினராகச் சந்தா செலுத்தியுள்ளார். எனவே அவர் சார்பாக எனக்கு அறிவாலயம் பற்றிக் கேட்க உரிமை உள்ளது.)

5.கடந்த 5 ஆண்டுகளில் சட்ட சபைக்கே போகாமல் தவிர்த்தது ஏன்?
(இதே கேள்வியை ஜெ.யிடம் கேள் என்றெல்லாம் பதில் சொல்லக் கூடாது. அப்படித்தான் சொல்வேன் என்றால் ஜெ.க்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?)

6.மத்திய அரசில் ம.தி.மு.க எம்.பிக்களின் எண்ணிக்கையும் சேர்த்துக் காட்டி மத்திய அமைச்சர் பத்விகளைப் பெற்றீர்கள் என்ற வை.கோ வின் குற்றச்சாட்டிற்கு என்ன பதில்? இது குறித்து பிரதமரும் எதுவும் பதில் கூறாதது உங்களின் மீது தவறு உள்ளது என்பதைக் காட்டுகிறது என்று கூறுகிறேன், உங்களின் பதில் என்ன?

7. தேர்தல் அறிக்கையில் இலவசத் திட்டங்கள் அறிவித்துளீர்கள். அரசின் வருமானத்தைப் பெருக்க ஒரு வழியையும் சொல்லவிலையே?, வரவு இல்லாமல் எப்படிச் செலவுசெய்ய முடியும்.

Saturday, April 22, 2006

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா....

நம்ம கலைஞர் பற்றி பொதுமக்கள் இந்தப் பாடலைப் பாடினால்

ஜெயா ஓகோ... வைகோ ஆகா
ஜெயா வைகோ ஜெயா வைகோ ஆகா ஓகோ..
ஜெயாவின் கலரென்ன நெறமென்ன கலைஞர் வெறும் கறுப்புக் கண்ணாடிதானே..
no problem அத விட்ரு.
ஜெயாவின் கலரென்ன வெள்ள, கலைஞர் கருப்பு, இருந்தாலும் பரவாயில்ல கருப்பும் வெள்ளையும் சேர்ந்து தானே பழைய எம்.ஜி.யார் படமெல்லாம் பாத்தோம் அட ஆமா.
கலைஞர் பெரும் பணக்காரர், நாம யாரு அவருக்கு நாம ஓட்டுப் போட்டா இன்னும் பணக்காரர் ஆவார், அவர் ஆனா நாம ஆனா மாதிரி, நாம ஆனா எல்லாரும் ஆன மாதிரி தானே.. அதுக்கு.
திருப்பதி ஏழுமல வெங்கடேசா.. கலைஞர தேர்தல்ல ஜெயிக்க வையப்பா
திருப்பதி ஏழுமல வெங்கடேசா.. கலைஞர தேர்தல்ல ஜெயிக்க வையப்பா
கலர் டீவி தார்றாராம்...ரெண்டு ரூபாக்கு அரிசி தார்றாராம்
தேர்தலுல ஜெயிச்சாசிசுனா, எதுக்கு
(அடுத்து வைகோ பாடுகிறார்)
திருப்பதி ஏழுமல வெங்கடேசா.. அவங்க சொல்லுறதில் உண்மயில்ல சீனிவாசா
அவருக்கு சன் டீவி இருக்குய்யா. பரதேசி நானுய்யா. எனக்கு மட்டும் ஓட்டுப் போடய்யா
(பொது மக்கள்)
எதுக்கு?
திருப்பதி ஏழுமல வெங்கடேசா.. கலைஞர தேர்தல்ல ஜெயிக்க வையப்பா

..

...
...
..
..

(பொது மக்கள்)
கூட்டணியிலாம தேர்தலில்லே, பா.ம.கா அடிக்காத பல்டியில்லே ..
கூட்டணியிலாம தேர்தலில்லே, பா.ம.கா அடிக்காத பல்டியில்லே ..
அந்த பி.ஜே.பியக் கேக்க நாதியில்ல.

.....
....


-------------------------
பாட்ட forward , rewind பண்ணி பாட்ட மாத்தி யெழுதுரதுகுள்ள தாவு தீந்திடிச்சி.
பாட்ட வச்சி நான் தி.மு.க ஆதரவாளர் என் நினைத்து விட வேண்டாம்

Tuesday, April 11, 2006

நான் நாத்திகவாதியா? ஆத்திகவாதியா?

திரு.ஜோசப் அவர்களுக்கும், முத்து தமிழினிக்கும் நடைபெற்றுவரும் விவாதங்களைப் படித்த போது நான் நாத்திகவாதியா? ஆத்திகவாதியா? திராவிடனா? எனக் கேள்வி எழுந்தது, என்னால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

பல காலமாக எனக்கு இது பெரும் குழப்பமாகவே இருந்து வந்துள்ளது. கோவிலுக்கு எப்போதாவது போவது உண்டு, ஆனால் மனதை
ஒரு முகப்படுத்தி கடவுளை வணங்குவது இல்லை. கடவுளிடமும் எதுவும் பெரிதாக வேண்டிக் கொள்வதும் இல்லை.
தினமும் விபூதி, குங்குமம் பூசிக் கொள்வது இல்லை. நண்பர்கள் கோவிலுக்கு அழைக்கும் போது அங்கு கூடும் மக்களைப்
பார்ப்பதற்கே பெரும்பாலும் செல்கிறேன்.

நாள் கிழமை பார்த்தெல்லாம் சைவம்/அசைவம் எனச் சாப்பிடுவது கிடையாது. நினைத்ததை பிடித்தபோது சாப்பிடுகிறேன்.

தீபாவளி/பொங்கல் போன்ற பண்டிகைகள் கொண்டாட விருப்பம் இருப்பதிலை. வீட்டாரின் வற்புறுத்தலின் பேரிலே புத்தாடைகள் அணிகிறேன்.
ஆனால் பல நேரங்களில் அலுவலகத்திற்குப் பயணிக்கும்போது கடவுளை(எங்கள் ஊரில் உள்ள முத்துமாரியம்மனை)
மனதில் நினைத்துக் கொள்வது உண்டு. ஆனால் கடவுளிடம் எந்தக் கோரிக்கையும் வைப்பது இல்லை.

சில முக்கியமான விசயங்களைத் தொடங்கும் போது முத்துமாரியம்மனை மனதில் நினைத்துக் கொள்வது உண்டு.

அதவது இந்த விசயத்தில், பண்டிகைகள் கொண்டாடியோ, கோவிலுக்குச் சென்றோ கடவுளைத் தேட வேண்டியது இல்லை. கடவுளை
நினைத்த இடத்தில் இருந்தே நினைத்துக் கொண்டாலா, மனதில் வணங்கிக் கொண்டாலோ போதும் என் நினைப்பவன்,

என்னைப் போன்றவர்களை நாத்திகவாதிகள் என்றும் சொல்ல முடியாது. கடவுளே இல்லையென்று சொல்பவ்ர்கள் அவர்கள்.
ஆத்திகவாதியும் கிடையாது. கடவுள் இருக்கிறார் என்று சொல்லி அவருக்கு என்று உள்ள சில விதிமுறைகளையும்(விரதம், பண்டிகைகள் கொண்டாடுவது etc..) கடைபிடிப்பது இல்லை.

ஆனால் நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது. அதற்கு நான் தரும் ஒரு வடிவம் நான் நினைத்துக் கொள்ளும் முத்துமாரியம்மன்.
வேறு சிலருக்கு வேறு வடிவங்கள் இருக்கலாம். அந்த சக்திக்கு 'கடவுள்' என்ற ஒரு பொதுப்பெயரும் உண்டு.

எனக்கு இருக்கும் இத்தகைய சிந்தனைகளை யாரிடமும் தினிப்பதும் இல்லை.

என்னைப் போன்ற சிந்தனை உள்ளவர்களை எந்த வகையில் சேர்ப்பது?

Thursday, April 06, 2006

சன் டீ.வி யின் சிறப்புப் பார்வை

இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவது பிடிக்காமல்
யாரோ ஒருவர் யோசிக்காமல் திமுக மீது வழக்குத் தெடர்த்து விட்டால், நீதிமன்றமும் அதனை அவசர வழக்காக ஏற்றுக் கொண்டது என வைத்துக் கொள்வோம் . அப்போது சன் டீ.வியில் என்ன சொல்வார்கள்.

சன் டீ.வின் சிறப்புப் பார்வை வழங்குவோர் சிந்த்தால்.

இன்று திமுக மீது தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்க்கட்சிகள் பொறாமையால் தொடரப்பட்ட வழக்கு. மக்களின் பொதுஅறிவைப் பெருக்க தொலைக்காட்சி அவசியமானது.

1930ம் ஆண்டில் தொலைக்காட்சி கண்டுபடிக்கப்பட்டது முதல் இன்றுவரை அதன் பயன்கள் கணக்கில் அடங்காதவை.
செய்திகள் முதல் சினிமா வரை அனைத்தும் பொது அறிவை வளர்ப்பவை.

உலகத்தில் எது நடந்தாலும் உடனுக்குடன் நமக்குத் தெரிவிப்பது இந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளே.

கிரிக்கட் போட்டி முதல் ஒலிம்பிக் போட்டிகள் வரை நேரடியாக ஒளிபரப்பி அத்தனை நிகழ்சிகளும் பொது அறிவை வளர்ப்பவை

இராமாயணம், மகாபாரதம் போன்ற நிகழ்சிகளை ஒளிபரப்பி ஆன்மீகத்தை வளர்த்வை இந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளே.

அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழலை அம்பலப் படுத்தியதும் ஒரு தொலைக்காட்சிதான்.

நாடாளுமன்ற எம்.பி கள் லஞ்சம் வாங்கியதைக் காட்டியதும் தொலைக்காட்சிப் பெட்டிதான்.

சன் டீவியின் சென்றவார உலகம் நிகழ்சியின் மூலம் ஒரு வாரத்தில் உலகத்தில் நடந்ததை அரை மணி நேரத்தில் மக்கள் அறிந்து கொள்ளச் செய்ததும் தொலைக்காட்சிப் பெட்டிதான்.

சித்தி, அண்னாமலை, செல்வி போன்ற தொடர்களை ஒளிபரப்பி மக்களின் அபிமானமான் அந்தஸ்தைப் பொற்று முதல் இடத்தில் இருப்பதும் சன் டீ.வி தான்.

ஆனால் இவைகளை அறியாமல் வாடும் 53 லட்சம் குடும்பங்களின் கதி என்ன?

நாளை பார்க்கலாம்.

Wednesday, April 05, 2006

வருமான வரி ஏன் கட்டணும்?

நம்ம கருத்து கந்தசாமி வீணாப்போன கருணாநிதி எல்லோருக்கும் டீ.வி இலவசமாகக் கொடுக்கப் போறேன்னு சொன்னவுடன், நான் இந்த அரசுக்காக கடந்த 3 வருடங்களாக முறையாகச் செலுத்தி வந்த வருமான வரியினைக் கூட்டிப் பார்த்தேன். கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் செலுத்தியுள்ளேன். இதில் பல தகிடுதத்தங்கள் செய்து நான் 80ஆயிரம் வரை வரி ஏய்ப்பு செய்திருக்க முடியும். மனசாட்சிக்குப் பயந்து வரி கட்டினால் கட்டிய பணம் ஊழலிழும், வெட்டியான பயனில்லாத திட்டங்களிலும் வீணடிக்கப்பட்டுள்ளதோ/அல்லது வீணடிக்கப் பட்டுவிடுமே என்ற பயமும், ஒரு கையாலாகாத தன்மையும் என்னுள் ஏற்படுகின்றது.
எனவே இந்த முறை நம்ம கைவரிசையைக் காட்டி விட வேண்டியது தான் என முடிவு செய்துள்ளேன்.

53 லட்சம் குடுப்பங்க்ளுக்கும் டீ.வி கொடுக்க 1100 கோடி ரூபாய் செவவழிக்கப் போறாராம்.
அட, வீணாப்போனவரே,
1. 1100 கோடி வைத்து தமிழகத்தில் உள்ள 900 கி.மீ ரயில் பாதையை அகலப் படுத்தலாம்.
2. சென்னைக்கு கடல் நீரை குடிநீர் ஆக்கலாம்.
3. எத்தனை ஆரம்பப் பள்ளிகள் ஆரம்பிக்கலாம்.

ஏன்யா, யார் வீட்டுப் பணத்தில் யாருக்குக் கொடுப்பது. எல்லாம் என்னை மாதிரி ஆட்கள் இரவு பகல் பாக்காமல் கம்யூட்டரைப் பார்த்து கண் வீங்கிச் சம்பாதித்த பணம்.
கொடுக்கனும்னா உன் சொத்த வித்துப் பண்ணுங்கள். இல்ல சன் டீ.வியை அடமானம் வச்சுப் பண்ணுங்கள்.

கருணாநிதி ஜெயித்தால் காந்தி சொன்ன வரி கொடா இயக்கத்தை நான் பின்பற்றுவது என முடிவு செய்துள்ளேன். அப்ப நீங்க?