Sunday, March 08, 2015

குடும்பக் கட்டுப்பாடு மனித இனத்தை அழிக்குமா?

50 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு குடும்பத்தில் 10 குழந்தைகள் வரை பிறக்கும். அதில் பாதி குழந்தைகள் பல்வேறு நோய்களால் குழந்தைப் பருவத்திலேயே இறந்து போகும் வாய்ப்பு இருந்தது. மீதிக் குழந்தைகள் நோயால் பாதிக்கப்பட்டாலும் எதிர்ப்பு சக்தி இருந்திருந்தாலும் பிழைத்து வளரும். அத்தககைய குழந்தைகளுக்கு பிற்காலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நோய்களை எதிர்க்கும் ஆற்றல் மரபணு  மூலமாகக் கடத்தப் பட்டு அதன் சந்ததிகள் காப்பற்றப்படும் என்ற நிலை இருந்தது.

உயிரினங்களின் மரபணுக்களில் எப்பொழுதுமே சிறு சிறு மரபணு குறைபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். எந்த உயிரினத்தின் மரபணுவும் 100 சதவீதம் சரியானது அல்ல. பிழைகள் இருந்து கொண்டே இருக்கும். பல நேரங்களில் மறைந்து காணப்படும்.

உதாரணமாக சிலருக்கு கை அல்லது கால்களில் ஆறு விரல்கள் இருக்கலாம். அத்தகைய ஆணோ பெண்னோ அடுத்த தலைமுறையை உருவாக்கும் போது அந்த மரபணு கடத்தப்படும். ஆனால் அதில் ஒரு பாதி குரோமோசோம்கள் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து வரும், மறுபாதி பாதிபில்லாத எதிர் பாலினத்தவரிடம் இருந்து வரும் போது சில குறைபாடுகள் மட்டுப்படுத்தப்படும் அல்லது மறைந்து போகும்.

அதற்கு நேர்மாறாக எதிர் பாலினத்திடமும் அதேவிதமான பாதிக்கப்பட்ட/பிழையான குரோமோசோம்கள் இருக்குமானால் அந்தகைய பாதிப்பிறகுக் காரணமான பிழையான மரபணுக்கள் வலுப்பெற்று அதன் சந்ததிகளுக்கும்
குறைபாடுகளை ஏற்படுத்துகிறது. எனவே தான் ஒரே குடும்பத்திற்குள் திருமணம் செய்யும் போது அக்குடும்பத்தினருடைய குரோமோசோம் குறைபாடுகள் வலுப்பெற்று சந்ததிகளைப் பாதிக்கும்.

பிறக்கும் ஒவ்வொரு உயிரினத்திலும் குரோமோசோம்கள் சிறுசிறு மாறுபாடுகள் ஏற்பட்டு/மேம்படுத்தப் பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு புதிய இனங்கள் உருவாகும்.
சிம்பன்சி குரங்கின் மரபனுக்களும் மனிதனின் மரபணுக்களும் 98 சதவீதம் ஒரே மாதிரியானவை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஏற்பட்ட 2 சதவீத குரோபோசோம் மாறுபாடுகளே மனித இனத்தை உருவாக்கியுள்ளது.
இத்தகைய குரோமோசோம் மாறுபடுதலை திடீர் மாற்றம்(mutation)என அழைக்கப்ப்டுகிறது.

இன்னும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மனிதனில் இருந்து மேம்பட்ட குரோமோபோம்களை உடைய உயிரினங்கள் இந்த திடீர் மாற்றம் மூலம் உருவாகும். அதற்கு தடையில்லாத குரோமோசாம் பரிமாற்றங்கள் தேவை.

இப்போது மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு குரோமோசோம் பகிர்தலை செயற்கையாக தடை செய்கிறது. சமூகக் காரணங்களுக்காக தற்போது ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளே உள்ளனர். இது இயற்கைக்கு மாறானது. இதனால் திடீர் மாற்றம் ஏற்படும் சதவீதம் குறைகிறது. இதனால் நல்ல குரோமோசாம்கள் உள்ள தகுதியுளள உயிரினம் தோன்றுவது தடுக்கப்பட்டு, முதல் இரண்டு குழந்தைகளின் குரோமோசாம்கள் மட்டுமே இனம் வளர அனுமதிக்கப்படுகிறது.  இதன் மூலம் பிற காரணிகளை உடைய நல்ல குரோமோசாம்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டு புதிய பண்புகளை உடைய உயிரினங்கள் உருவாக்கப்படுவது இல்லை.

திடீர் மாற்றம் மூலம் ஒரு உயிரில் புதிய பண்பு உருவாவதற்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தேவைப்படும். உயிரினங்களின் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்படுவதால் இந்த் திடீர் மாற்றத்தால் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் மனிதனால் செயற்கையாக கட்டுப்படுத்தப்படுகிறது.

எதிர்காலத்தில் ஒரு நோயுள்ள மனித இனத்தையே உருவாக்கும். இதன் விளைவுகள் உடனடியாகத் தெரியாது. இன்னும் பல்லாயிரக்கணகாண ஆண்டுகளுக்குப் பிறகு எதிரொலிக்கும்.
 
இதே மாதிரியான குடும்பக் கட்டுப்பாடு தொடருமானால் மேம்படுத்தப்பட்ட மனித இனம் தோன்றாமலேயே போகும்.

Saturday, November 30, 2013

மீன் குழம்பு மசாலாப் பொடி தயாரிக்கும் முறை!

மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்வதற்கான மசாலாப் பொடி தயாரிக்கும் முறை கீழே தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

மிளகாய் வற்றல் : 250 கிராம்
மல்லி : 300 கிராம்
சீரகம் : 200 கிராம்
மிளகு : 25 கிராம்
விரலி மஞ்சள் : 25 கிராம்
அரிசி : 25 கிராம்
உப்பு : 10கிராம்


செய்முறை:
முதலில் மல்லி, மிளகாய் வற்றல்,மிளகு, மஞ்சள் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காய வைக்கவும்.

பிறகு மல்லி, சீரகம், மிளகு, மஞ்சள்,உப்பு ஆகியவற்றை லேசாக தனித்தனியாக வறுத்து எடுக்கவும். (எண்ணை இல்லாமல் வெறும் வாணலியில்)

அரிசியை பொன்னிறமாக வாணலியில் வறுத்து எடுகவும்.

பின்னர் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மாவு மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

பின் குறிப்பு: இந்த மசாலாப் பொடியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால் வாசம் மற்றும் நிறம் போகாமல் ஒரு வருடம் வரை வைத்துப் பயன் படுத்தலாம்.

இதே மசாலாப் பொடியை புளிக்குழம்பு, காரக்குழம்பு வைக்கவும் பயன் படுத்தலாம்.


பின்குறிப்பு 2: கடையில் தயாராக விற்கும் மாசாலாப் பொடிகள்(ஆச்.., சக்.. போன்றவை. எனக்குத் தெரிந்த மொத்த விற்பனையாளர் சொன்ன தகவல்) தரமில்லாத மல்லி, சீரகம், கலர் பொடி சேர்த்த மிளகாய் மூலம் தயாரிக்கப் படுவதால் வீட்டிலேயே தயார் செய்து பயன் படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கும்.


Monday, September 02, 2013

வாடகை ஒப்பந்த பத்திரம் - Rental Agreement

வாடகை ஒப்பந்த பத்திரம்

--------- ம் வருடம் ---------------- மாதம் ---- ஆம் தேதி 23, சேதுபதி நகர், chennai திரு Raja அவர்கள்
1வது பார்ட்டியாகவும்(வீட்டின் உரிமையாளர்)

சொந்த ஊரான் -----------------மாவட்டம், --------------- வட்டம்,-----------------தெரு, கதவு எண்---------- ல் வசித்து வரும் திரு/திருமதி ------------------------
அவர்கள் 2வது பார்ட்டியாகவும் (வாடகைதாரர்)


மேற்சொன்ன 1வது பார்ட்டிக்குச் சொந்தமான 23 சேதுபதி நகர், chennai முதல் தளத்தில் அமைந்துள்ள வீட்டினை நம்மில் 2வது பார்ட்டி
குடியிருப்பதற்காக வேண்டி 1வது பார்ட்டியினை அணுகி வாடகைக்குக் கேட்க, அதற்கு 1வது பார்ட்டி, 2வது பார்ட்டிக்கு வாடகைக்கு விடுவதற்க்கு ஒப்புக்கொண்டு
கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை எழுதிக் கொண்டுள்ளனர்.

ஆக, நாம் 1,2 ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்

1. நம்மில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு மாத வாடகையாய் ரூபாய் ---------------------(ரூபாய் ------------------------------------------------------------------------------------------------------------------------------)
பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

2. 1வது பார்ட்டியிடம் 2வது பார்ட்டி இன்று ----------------------------------------------------- ரூபாய் -------------------------------------------------------- மட்டும் ரொக்கமாக செலுத்தி உள்ளார். மேற்படி
தொகையை நம்மில் 2வது பார்ட்டி வீட்டினை காலி செய்து கொண்டு போகும் போது 1வது பார்ட்டி திருப்பிக் கொடுத்து விட வேண்டியது. மேற்படி இந்த அட்வான்ஸ் தொகைக்கு
வட்டி ஏதும் கிடையாது.

3. 1வது பார்ட்டி தற்போதுள்ள வீட்டினை எப்படி ஒப்படைத்தாரோ அதே நிலையில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டினை காலி செய்யும் சமயத்தில் சேதமில்லாமல் ஒப்படைக்க வேண்டும்.
  மேற்படி வீட்டில் ஏதாவது சேதம் இருந்தால் 1வது பார்ட்டி அட்வான்ஸ் தொகையில் சேதத்தின் மதிப்பை கழித்துக் கொண்டு 2வது பார்டியிடம் ஒப்படைக்க வேண்டும்.

4. 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை மீட்டர் அளவுப்படி மின்சார அலுவலகத்தில் தானே செலுத்திக் கொள்ள வேண்டியது.

5. 2 வது பார்ட்டி பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டணம் மற்றும் தண்ணீர் போன்றவற்றிக்கு ரூபாய் ------------- பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

6. இந்த வாடகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 11 மாத காலக் கொடுவிற்கு உட்பட்டது. அதாவது ------------------------- தேதி முதல் ------------------------------- தேதி வரையிலான 11 மாத காலத்திற்கு உட்பட்டது.

7. 11 மாத காலக் கெடுவிற்குள் 1வது பார்டிக்கு வீடு தேவைப்பட்டால் 2வது பார்ட்டிக்கு 2 மாத முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் 2வது பார்ட்டி வீட்டை காலி செய்ய விரும்பினால் 2 மாத முன்னறிவிப்பு
கொடுத்து விட்டு காலி செய்ய வேண்டியது.

8. மேற்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை 11 மாத காலம் முடிந்த பின்பு இருவரின் ஒப்புதலின் பேரில் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.

9. 2வது பார்ட்டி மேற்படி வீட்டில் குடியிருப்பதைத் தவிர வேறு எந்த விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்த்தக் கூடாது.

10. 2வது பார்ட்டி மேற்படி வீட்டை வேறு யாருக்கும் மேல் வாடகைக்கோ அல்லது உள் வாடகைக்கோ விடக்கூடாது.

11. 2வது பார்ட்டி தொடர்ந்து மூன்று மாத காலம் வாடகையைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேற்படி வீட்டை காலி செய்ய 1வது பார்ட்டிக்கும் உரிமையுண்டு.

இப்படியாக நாம் இரண்டு பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்.



வாடகை சொத்து விபரம்.

23, முதல் தளம்,  சேதுபதி நகர், chennai-600026,


1வது பார்ட்டி
(வீட்டின் உரிமையாளர்)


2வது பார்ட்டி
(வாடகைதாரர்)



சாட்சிகள்


1)




2)

Sunday, October 12, 2008

123 Test

123 test

Sunday, February 03, 2008

தை ஒன்னா? சித்திரை ஒன்னா? ரெண்டும் இல்லை.

சூரியன் மகர ரேகையைத் தொட்டுப் பின் கடக ரேகைக்கு திரும்பும் நாள் தான் தை மாதம் முதல் தேதி.இது மிகவும் சரியானது. பின்னர் சித்திரை மாதம் முதல் தேதிக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியம்?

இருக்கிறது.

அதாவது மகரரேகை இலங்கைக்குக் கீழே இந்தியப் பெருங்கடலில் இருக்கிறது. சூரியன் மகர ரேகையைத் தொட்டுவிட்டு வடக்கு நோக்கி நகர்ந்து குத்து மதிப்பாக இந்திய இலங்கைப் பகுதிகளைத் தொடும் நாள் சித்திரை ஒன்று. ஆகவே தான் சித்திரை ஒன்று புத்தாண்டாகக் கொண்டாடப் பட்டு வந்தது(இப்பத்தான் மாத்திட்டாங்களே :) ).

மிகச் சரியாகத் தமிழ்புத்தாண்டக் கொண்டாடுவது என்றால், கன்னியாகுமரியில் ஒருநாள், மதுரையில் ஒருநாள், சென்னையில் ஒருநாள் என்று வரும்.

ஆகவே ஊருக்கு ஊர் ஜோசியக் காரரைக் கேட்டு, சூரியன் அவரவர்களின் ஊரைக் கடக்கும் நாளையே புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பதே
சரி.

ரேகை பற்றிய விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். (கை ரேகை இல்லீன்ங்கண்ணா)

Saturday, January 05, 2008

நீ எம்.ஜி.ஆர் கட்சியா? கருணாநிதி கட்சியா?

நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் வீட்டில் இணையத் தொடர்பு வாங்கி எழுதும் முதல் பதிவு.
சிவக்குமார் அவர்களின் இந்தப் பதிவு என்னுடைய பள்ளிப் பருவ நினைவகளைத் தூண்டிவிட்டது.

ஒன்றாம் வகுபுப் படிக்கும் போது என் வகுப்பு சக மாணவர்கள் கேட்டுக் கொள்வது நீ எம்.ஜி.ஆர் கட்சியா? கருணாநிதி கட்சியா? யாருக்கும் அப்போது கட்சி என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் எம்.ஜி.ஆர் நல்லவர் , கருணாநிதி கெட்டவர் என்று மட்டும் பேசிக்கொள்வார்கள். எல்லோருமே தாங்கள் எம்.ஜி.ஆர் கட்சி என்றே சொல்லிக் கொள்வார்கள். யாராவது ஓரிருவர் கருணாநிதி கட்சி என்றால் அவனையும் சேர்த்துக் கெட்டவன் என்றே சொல்லிக் கொள்வோம்.

ஏதோ ஒரு ஓட்டுப் பதிவின் போது பள்ளிக்கூடதின் அருகில் விளையாடச் சென்ற போது, சின்னப் பயலுக எல்லாம் இங்க வரக்கூடாதுடா, ஓடுங்கடா என்று விரட்டி விட்டார்க்கள்.

பிறகு ஒருமுறை, ராமநாதபுரத்தில் 'வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்களை தேனீக்கள் விரட்டியடித்தன' என்ற செய்தியை என் அம்மாவிடம் சொல்ல ஆரம்பிக்கும் போது, அதனை முழுவதுமாகக் கேட்காமலேயே, இந்த வயசில உனக்கு ஏண்டா அரசியல் என்று என் அம்மா திட்டியதும் நினைவுக்கு வருகிறது.

1989 ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலின் போது எங்கள் தொகுதியில் மக்களுக்கு விளக்க, மாதிரி வாக்குச் சீட்டுகளை ஒரு கட்சி அச்சடித்து, இந்த இடத்தில் முத்திரை குத்த வேண்டும் என்று விளக்கிக் கொண்டிருந்தார்கள். நான் அந்தச் சீட்டை தேர்தல் அன்று கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த போதுஉண்மையான வாக்குச் சீட்டு என நினைத்து சில கட்சிக்காரர்கள் யாருடா நீ, உனக்கு யாருடா இதைக் கொடுத்தா என மிரட்டியதும் நினைவுக்கு வருகிறது.

1999ம் ஆண்டு ராமநாதபுரம் நாடளுமன்றத் தொகுதி தேர்தலில் பவானி ராஜேந்திரன் அவர்களுக்கு ஓட்டுப் போட்ட போது, சீ! தேர்தல்னா இவ்வளவுதானா, என்று ஒரு சலிப்பும் வந்தது.

Saturday, February 10, 2007

வரிக்கு வரி செலுத்தும் அவலம்.

இந்தியாவில் மதிப்புக் கூட்டுவரி அமல் செய்த பிறகு ஒரு பொருளை வாங்கும் போது எவ்வளவு வரி செலுத்துகிறேம் என்பதைத் தெரிந்து கொள்ளமுடிகிறது என்பது ஒரு நல்ல விசயம்.

ஆனால் அதுவே ஒரு கூட்டுக் கொள்ளையாக , செலுத்திய மதிப்புக் கூட்டுவரிக்கே வருமான வரி செலுத்த வேண்டிய மோசமான நிலையை நாம் இப்போது நேரடியாகப் பார்க்க முடிகிறது.

அதாவது ஒருவர் கடந்த ஒரு வருடத்தில் பொருள்களை வாங்கும் போது 10000 ரூபாய மதிப்புக் கூட்டு வரியாகச் செலுத்தியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

தற்போது வரி விதிக்கத்தக்க வருமாணம்(Taxable Income) 2,50,000 ரூபாயைத் தாண்டும் போது 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்பது சட்டம்.

தனிநபரின் Taxable Income 2,60,000 ரூபாய் என்றால் 2,50,000 க்கு மேற்பட்ட 10,000 ரூபாய்க்க்கு 30 சதவீத வரியாக ரூபாய் 3000 ரூபாய் செலுத்த வேண்டும்.

அதாவது நான் அனுபவிக்காத 10,000 ரூபாய்க்கு 3000 வரி செலுத்த வேண்டுமாம். இந்தக் கூட்டுக் கொள்ளையை எதிர்த்து யாரும் கேள்வி கேட்டார்களா என்று தெரியவில்லை.

அதாவது நான் வாங்கிய பொருட்களுக்கு 30 சதவீதத்தில் இருந்து 42.5 சதவீதம் வரை வரி.

இப்படிக் கண்டபடி வரி விதித்தால் வேறு வகைகளில் பித்தலாட்டம் செய்பவர்களே அதிகரிக்கிறார்கள்.

அதாவது அரசு மறைமுககாக கருப்புப்பணமும் பதுக்கலும் உருவாகக் காரணமாக இருக்கிறது.

யார் மனசிலே யாரு. என் மனசிலே யாரு. அவங்களுக்கு என்ன பேரு!

நான் பிரபல வலைப்பதிவர் ஒருவரை மனதில் நினைத்து 11 கேள்விகள் கேட்பேன். அதற்கு ஆம்/இல்லை நானே பதிலும் சொல்லிவிடுவேன். கேள்வியையும் பதிலையும் வைத்து அவர் யார் என்று கண்டு பிடிக்க வேண்டும்.

1. உங்கள் மனதில் இருக்கும் அந்த நபர் ஆணா?
ஆம்.

2. இந்திய நாட்டவரா?
ஆம்

3. தென் இந்தியரா?
ஆம்

4. அவர் தமிழ்நாட்டுக் காரரா?
ஆம்

5. அவர் ஆணா?
ஆம்

6. ஐம்பது வயதைத் தாண்டியவரா?
ஆம்

7. வலைப்பதிவில் அவருடைய பெருமைக்குக் காரணம் அரசியல்,பொழுது போக்கு, சுயபுராணம் தானா?
ஆம்

8.அவர் அடிக்கடி சர்சைகளில் சிக்கிக் கொள்பவரா?
ஆம்

09.அவர் உண்மையான பெயரில் மட்டுமே எழுதுபவரா?
இல்லை.

10. உங்கள் மனதில் இருக்கும் அந்த நபர் வலையுலகில் ஒரு விளம்பரப் பிரியரா?
ஆம்.

11.அவருக்கும் டெண்டுல்கருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
ஆம்.

அவ்வளவு தான் மக்களே. பதிலைப் பின்னூட்டங்களாகச் சொல்லுங்கள். மேலும் இது போன்ற கேள்வி பதிவுகளை ஆரம்ப்பித்துக் காலாய்க்க நாமக்கல் சிபி மற்றும் செந்தழல் ரவி அகியோரை அழைக்கிறேன்.