Saturday, February 10, 2007

வரிக்கு வரி செலுத்தும் அவலம்.

இந்தியாவில் மதிப்புக் கூட்டுவரி அமல் செய்த பிறகு ஒரு பொருளை வாங்கும் போது எவ்வளவு வரி செலுத்துகிறேம் என்பதைத் தெரிந்து கொள்ளமுடிகிறது என்பது ஒரு நல்ல விசயம்.

ஆனால் அதுவே ஒரு கூட்டுக் கொள்ளையாக , செலுத்திய மதிப்புக் கூட்டுவரிக்கே வருமான வரி செலுத்த வேண்டிய மோசமான நிலையை நாம் இப்போது நேரடியாகப் பார்க்க முடிகிறது.

அதாவது ஒருவர் கடந்த ஒரு வருடத்தில் பொருள்களை வாங்கும் போது 10000 ரூபாய மதிப்புக் கூட்டு வரியாகச் செலுத்தியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

தற்போது வரி விதிக்கத்தக்க வருமாணம்(Taxable Income) 2,50,000 ரூபாயைத் தாண்டும் போது 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்பது சட்டம்.

தனிநபரின் Taxable Income 2,60,000 ரூபாய் என்றால் 2,50,000 க்கு மேற்பட்ட 10,000 ரூபாய்க்க்கு 30 சதவீத வரியாக ரூபாய் 3000 ரூபாய் செலுத்த வேண்டும்.

அதாவது நான் அனுபவிக்காத 10,000 ரூபாய்க்கு 3000 வரி செலுத்த வேண்டுமாம். இந்தக் கூட்டுக் கொள்ளையை எதிர்த்து யாரும் கேள்வி கேட்டார்களா என்று தெரியவில்லை.

அதாவது நான் வாங்கிய பொருட்களுக்கு 30 சதவீதத்தில் இருந்து 42.5 சதவீதம் வரை வரி.

இப்படிக் கண்டபடி வரி விதித்தால் வேறு வகைகளில் பித்தலாட்டம் செய்பவர்களே அதிகரிக்கிறார்கள்.

அதாவது அரசு மறைமுககாக கருப்புப்பணமும் பதுக்கலும் உருவாகக் காரணமாக இருக்கிறது.

யார் மனசிலே யாரு. என் மனசிலே யாரு. அவங்களுக்கு என்ன பேரு!

நான் பிரபல வலைப்பதிவர் ஒருவரை மனதில் நினைத்து 11 கேள்விகள் கேட்பேன். அதற்கு ஆம்/இல்லை நானே பதிலும் சொல்லிவிடுவேன். கேள்வியையும் பதிலையும் வைத்து அவர் யார் என்று கண்டு பிடிக்க வேண்டும்.

1. உங்கள் மனதில் இருக்கும் அந்த நபர் ஆணா?
ஆம்.

2. இந்திய நாட்டவரா?
ஆம்

3. தென் இந்தியரா?
ஆம்

4. அவர் தமிழ்நாட்டுக் காரரா?
ஆம்

5. அவர் ஆணா?
ஆம்

6. ஐம்பது வயதைத் தாண்டியவரா?
ஆம்

7. வலைப்பதிவில் அவருடைய பெருமைக்குக் காரணம் அரசியல்,பொழுது போக்கு, சுயபுராணம் தானா?
ஆம்

8.அவர் அடிக்கடி சர்சைகளில் சிக்கிக் கொள்பவரா?
ஆம்

09.அவர் உண்மையான பெயரில் மட்டுமே எழுதுபவரா?
இல்லை.

10. உங்கள் மனதில் இருக்கும் அந்த நபர் வலையுலகில் ஒரு விளம்பரப் பிரியரா?
ஆம்.

11.அவருக்கும் டெண்டுல்கருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?
ஆம்.

அவ்வளவு தான் மக்களே. பதிலைப் பின்னூட்டங்களாகச் சொல்லுங்கள். மேலும் இது போன்ற கேள்வி பதிவுகளை ஆரம்ப்பித்துக் காலாய்க்க நாமக்கல் சிபி மற்றும் செந்தழல் ரவி அகியோரை அழைக்கிறேன்.