Saturday, November 30, 2013

மீன் குழம்பு மசாலாப் பொடி தயாரிக்கும் முறை!

மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்வதற்கான மசாலாப் பொடி தயாரிக்கும் முறை கீழே தரப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

மிளகாய் வற்றல் : 250 கிராம்
மல்லி : 300 கிராம்
சீரகம் : 200 கிராம்
மிளகு : 25 கிராம்
விரலி மஞ்சள் : 25 கிராம்
அரிசி : 25 கிராம்
உப்பு : 10கிராம்


செய்முறை:
முதலில் மல்லி, மிளகாய் வற்றல்,மிளகு, மஞ்சள் ஆகியவற்றை நன்றாக வெயிலில் காய வைக்கவும்.

பிறகு மல்லி, சீரகம், மிளகு, மஞ்சள்,உப்பு ஆகியவற்றை லேசாக தனித்தனியாக வறுத்து எடுக்கவும். (எண்ணை இல்லாமல் வெறும் வாணலியில்)

அரிசியை பொன்னிறமாக வாணலியில் வறுத்து எடுகவும்.

பின்னர் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மாவு மில்லில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

பின் குறிப்பு: இந்த மசாலாப் பொடியை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பயன்படுத்தினால் வாசம் மற்றும் நிறம் போகாமல் ஒரு வருடம் வரை வைத்துப் பயன் படுத்தலாம்.

இதே மசாலாப் பொடியை புளிக்குழம்பு, காரக்குழம்பு வைக்கவும் பயன் படுத்தலாம்.


பின்குறிப்பு 2: கடையில் தயாராக விற்கும் மாசாலாப் பொடிகள்(ஆச்.., சக்.. போன்றவை. எனக்குத் தெரிந்த மொத்த விற்பனையாளர் சொன்ன தகவல்) தரமில்லாத மல்லி, சீரகம், கலர் பொடி சேர்த்த மிளகாய் மூலம் தயாரிக்கப் படுவதால் வீட்டிலேயே தயார் செய்து பயன் படுத்தினால் ஆரோக்கியமாக இருக்கும்.


Monday, September 02, 2013

வாடகை ஒப்பந்த பத்திரம் - Rental Agreement

வாடகை ஒப்பந்த பத்திரம்

--------- ம் வருடம் ---------------- மாதம் ---- ஆம் தேதி 23, சேதுபதி நகர், chennai திரு Raja அவர்கள்
1வது பார்ட்டியாகவும்(வீட்டின் உரிமையாளர்)

சொந்த ஊரான் -----------------மாவட்டம், --------------- வட்டம்,-----------------தெரு, கதவு எண்---------- ல் வசித்து வரும் திரு/திருமதி ------------------------
அவர்கள் 2வது பார்ட்டியாகவும் (வாடகைதாரர்)


மேற்சொன்ன 1வது பார்ட்டிக்குச் சொந்தமான 23 சேதுபதி நகர், chennai முதல் தளத்தில் அமைந்துள்ள வீட்டினை நம்மில் 2வது பார்ட்டி
குடியிருப்பதற்காக வேண்டி 1வது பார்ட்டியினை அணுகி வாடகைக்குக் கேட்க, அதற்கு 1வது பார்ட்டி, 2வது பார்ட்டிக்கு வாடகைக்கு விடுவதற்க்கு ஒப்புக்கொண்டு
கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை எழுதிக் கொண்டுள்ளனர்.

ஆக, நாம் 1,2 ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்

1. நம்மில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு மாத வாடகையாய் ரூபாய் ---------------------(ரூபாய் ------------------------------------------------------------------------------------------------------------------------------)
பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

2. 1வது பார்ட்டியிடம் 2வது பார்ட்டி இன்று ----------------------------------------------------- ரூபாய் -------------------------------------------------------- மட்டும் ரொக்கமாக செலுத்தி உள்ளார். மேற்படி
தொகையை நம்மில் 2வது பார்ட்டி வீட்டினை காலி செய்து கொண்டு போகும் போது 1வது பார்ட்டி திருப்பிக் கொடுத்து விட வேண்டியது. மேற்படி இந்த அட்வான்ஸ் தொகைக்கு
வட்டி ஏதும் கிடையாது.

3. 1வது பார்ட்டி தற்போதுள்ள வீட்டினை எப்படி ஒப்படைத்தாரோ அதே நிலையில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டினை காலி செய்யும் சமயத்தில் சேதமில்லாமல் ஒப்படைக்க வேண்டும்.
  மேற்படி வீட்டில் ஏதாவது சேதம் இருந்தால் 1வது பார்ட்டி அட்வான்ஸ் தொகையில் சேதத்தின் மதிப்பை கழித்துக் கொண்டு 2வது பார்டியிடம் ஒப்படைக்க வேண்டும்.

4. 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை மீட்டர் அளவுப்படி மின்சார அலுவலகத்தில் தானே செலுத்திக் கொள்ள வேண்டியது.

5. 2 வது பார்ட்டி பொதுப் பயன்பாட்டிற்கான மின்கட்டணம் மற்றும் தண்ணீர் போன்றவற்றிக்கு ரூபாய் ------------- பிரதி ஆங்கில மாதம் 7-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

6. இந்த வாடகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 11 மாத காலக் கொடுவிற்கு உட்பட்டது. அதாவது ------------------------- தேதி முதல் ------------------------------- தேதி வரையிலான 11 மாத காலத்திற்கு உட்பட்டது.

7. 11 மாத காலக் கெடுவிற்குள் 1வது பார்டிக்கு வீடு தேவைப்பட்டால் 2வது பார்ட்டிக்கு 2 மாத முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் 2வது பார்ட்டி வீட்டை காலி செய்ய விரும்பினால் 2 மாத முன்னறிவிப்பு
கொடுத்து விட்டு காலி செய்ய வேண்டியது.

8. மேற்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை 11 மாத காலம் முடிந்த பின்பு இருவரின் ஒப்புதலின் பேரில் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.

9. 2வது பார்ட்டி மேற்படி வீட்டில் குடியிருப்பதைத் தவிர வேறு எந்த விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்த்தக் கூடாது.

10. 2வது பார்ட்டி மேற்படி வீட்டை வேறு யாருக்கும் மேல் வாடகைக்கோ அல்லது உள் வாடகைக்கோ விடக்கூடாது.

11. 2வது பார்ட்டி தொடர்ந்து மூன்று மாத காலம் வாடகையைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேற்படி வீட்டை காலி செய்ய 1வது பார்ட்டிக்கும் உரிமையுண்டு.

இப்படியாக நாம் இரண்டு பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்.



வாடகை சொத்து விபரம்.

23, முதல் தளம்,  சேதுபதி நகர், chennai-600026,


1வது பார்ட்டி
(வீட்டின் உரிமையாளர்)


2வது பார்ட்டி
(வாடகைதாரர்)



சாட்சிகள்


1)




2)