இந்தியாவில் மதிப்புக் கூட்டுவரி அமல் செய்த பிறகு ஒரு பொருளை வாங்கும் போது எவ்வளவு வரி செலுத்துகிறேம் என்பதைத் தெரிந்து கொள்ளமுடிகிறது என்பது ஒரு நல்ல விசயம்.
ஆனால் அதுவே ஒரு கூட்டுக் கொள்ளையாக , செலுத்திய மதிப்புக் கூட்டுவரிக்கே வருமான வரி செலுத்த வேண்டிய மோசமான நிலையை நாம் இப்போது நேரடியாகப் பார்க்க முடிகிறது.
அதாவது ஒருவர் கடந்த ஒரு வருடத்தில் பொருள்களை வாங்கும் போது 10000 ரூபாய மதிப்புக் கூட்டு வரியாகச் செலுத்தியிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
தற்போது வரி விதிக்கத்தக்க வருமாணம்(Taxable Income) 2,50,000 ரூபாயைத் தாண்டும் போது 30 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என்பது சட்டம்.
தனிநபரின் Taxable Income 2,60,000 ரூபாய் என்றால் 2,50,000 க்கு மேற்பட்ட 10,000 ரூபாய்க்க்கு 30 சதவீத வரியாக ரூபாய் 3000 ரூபாய் செலுத்த வேண்டும்.
அதாவது நான் அனுபவிக்காத 10,000 ரூபாய்க்கு 3000 வரி செலுத்த வேண்டுமாம். இந்தக் கூட்டுக் கொள்ளையை எதிர்த்து யாரும் கேள்வி கேட்டார்களா என்று தெரியவில்லை.
அதாவது நான் வாங்கிய பொருட்களுக்கு 30 சதவீதத்தில் இருந்து 42.5 சதவீதம் வரை வரி.
இப்படிக் கண்டபடி வரி விதித்தால் வேறு வகைகளில் பித்தலாட்டம் செய்பவர்களே அதிகரிக்கிறார்கள்.
அதாவது அரசு மறைமுககாக கருப்புப்பணமும் பதுக்கலும் உருவாகக் காரணமாக இருக்கிறது.
Saturday, February 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
test
Post a Comment