Sunday, February 03, 2008

தை ஒன்னா? சித்திரை ஒன்னா? ரெண்டும் இல்லை.

சூரியன் மகர ரேகையைத் தொட்டுப் பின் கடக ரேகைக்கு திரும்பும் நாள் தான் தை மாதம் முதல் தேதி.இது மிகவும் சரியானது. பின்னர் சித்திரை மாதம் முதல் தேதிக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியம்?

இருக்கிறது.

அதாவது மகரரேகை இலங்கைக்குக் கீழே இந்தியப் பெருங்கடலில் இருக்கிறது. சூரியன் மகர ரேகையைத் தொட்டுவிட்டு வடக்கு நோக்கி நகர்ந்து குத்து மதிப்பாக இந்திய இலங்கைப் பகுதிகளைத் தொடும் நாள் சித்திரை ஒன்று. ஆகவே தான் சித்திரை ஒன்று புத்தாண்டாகக் கொண்டாடப் பட்டு வந்தது(இப்பத்தான் மாத்திட்டாங்களே :) ).

மிகச் சரியாகத் தமிழ்புத்தாண்டக் கொண்டாடுவது என்றால், கன்னியாகுமரியில் ஒருநாள், மதுரையில் ஒருநாள், சென்னையில் ஒருநாள் என்று வரும்.

ஆகவே ஊருக்கு ஊர் ஜோசியக் காரரைக் கேட்டு, சூரியன் அவரவர்களின் ஊரைக் கடக்கும் நாளையே புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பதே
சரி.

ரேகை பற்றிய விபரங்களுக்கு இங்கே பார்க்கவும். (கை ரேகை இல்லீன்ங்கண்ணா)