Wednesday, October 11, 2006

யார் மனதில் யார்? அவங்களுக்கு என்ன பெயர்?

G.S.பிரதீப்... தி கிராண்ட் மாஸ்டர். இவர் பெயர்களின் புதையல்.

உலகில் வாழ்ந்த, வாழ்கின்ற பிரபலமானவர்களின் பெயர்களையும் அவர்கள் தொடர்பான செய்திகள் அவர்களைப் பற்றிய தகவல்களையும் தன்னுள் புதைத்து வைத்துள்ளார்.
ஆம் நான் சொல்லிக் கொண்டிருப்பது விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் கிராண்ட் மாஸ்டர் நிகழ்சியைப் பற்றித்தான்.

இது ஒரு மிகவும் அருமையான தொலைக்காட்சி நிகழ்சி.

நிகழ்சியில் கலந்து கொள்பவர்கள் ஒரு பிரபலமானவரை மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும். கிராண்ட் மாஸ்டர் உங்களிடம் 21 கேள்விகள் கேட்பார்.
அதற்கு ஆம், இல்லை என பதில் சொல்ல வேண்டும். முடிவில் நம் மனதில் உள்ள அந்தப் பிரபலமானவரை அவர் 99 சதவீதம் சரியாகச் சொல்லி விடுவார்.

கிராண்ட் மாஸ்டரால் கண்டறிய முடியாத பெயர்களை நாம் மனதில் நினைத்திருந்தால் நமக்குப் பரிசு இருபத்து ஐந்தாயிரம், ஐம்பதாயிரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை உண்டு.

நான் கடந்த 10 வாரங்களாக நிகழ்சியைப் பார்த்து வருகிறேன். அதில் அவரால் மார்க்கோபோலோ மற்றும் தமிழ்வாணன்(மணிமேகலை பிரசுரம்)ஆகிய பெயர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த விளையாட்டில் நடுவராக மூன்று பேர் அமர்ந்திருப்பார்கள். நிகழ்சியின் ஆரம்பத்தில் நாம் நினைத்திருக்கும் பெயரை அவர்களிடம் ரகசியமாகச் சொல்ல வேண்டும். அவர்கள் அந்தப் பெயரை அனுமதித்தால் நாம் விளையாடலாம். மேலும் நடுவர்கள் நம்முடைய பதில்களை உடனுக்குடன் சரிபார்த்து , நம் பதில் தவறு என்றால் உடனே எச்சரிக்கை செய்வார்கள்.

இந்த நிகழ்ச்சி ஒரு நம் அறிவுக்குத் தீனி போடும் நிகழ்சியாகும்.

கடையில் நான் சொல்ல வந்ததைச் சொல்ல மறந்து விட்டேன் பாருங்கள். இந்த நிகழ்சியைத் தொகுத்து வழங்குபவர் நடிகை காயத்திரி ஜெயராம். வழு வழுப்பாக அழகாக இருக்கிறார்.குரலும் அழகாக வசீகரமாக இருக்கிறது. இது தான் அவருடைய உண்மையான குரலா அல்லது மாற்றிப் பேசி தொகுத்து வழங்குகிறாரா என்று தெரியவில்லை. அருமை.

லண்டனில் நான் இருந்த போது வேறு வழியே இல்லாமல் சன் டீவியில் கோலங்கள், செல்வி போன்ற கொடுமையான தொலைக்காட்சிகளை நிகழ்சிகளை வேறு வழியில்லாமல் பார்த்தேன்.பெங்களூரில் இப்போது அதில் இருந்து எனக்கு விடுதலை.

தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டீவியில் தான் அருமையான நிகழ்சிகள் இருக்கின்றன.

யார் மனதில் யார்?, ஹட்ச் கலக்கப் போவது யார்?, தீபாவளி கலாட்டா போன்றவைகள் அருமையாக இருக்கின்றன. இவைகளைப் பார்ப்பதற்காகவே அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் சீக்கிரம் கிளம்பி விடுகிறேன்.

No comments: