Wednesday, October 18, 2006

வரி நீக்கத்தால் தமிழ் வளர்ந்ததா??

நேற்று பெங்களூரில் என் வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் டி.வி.டி வாங்கச் சென்றேன். எம்டன் மகன் என்ற படம் இருக்கிறதா என்று கேட்டேன். அவரோ அப்படி ஒரு படமே வரவில்லை என்று சொன்னார்.

என்னடா இது வம்பாப் போச்சு என்று என் நண்பனைத் தொலைபேசியில் அழைத்து "என்னாடா, எம்டன் மகன் படத்துல பரத் படத்துல நல்லா நடிச்சுருக்காருன்னு சொன்னீயே, கடைக்காரர் அப்படி ஒரு படமே வரலன்னு சொல்றார்டா என்றேன்." எம்டன் மகன் படத்தை எம் மகன் என்று தமிழ் வளர்சிக்காக பெயர் மாற்றப்பட்டதையும், அதற்காக திரையுலகினரின் பாராட்டுவிழா என்று குத்தாட்டத்தை தாத்தா கலைஞ்ர் ரசித்ததையும் அதற்குப் போட்டியாக ஜெயா டீ.வி யும் புரட்சித் தலலவியும் குத்தாட்டத்தை ரசித்து பார்த்த மற்றொரு நிகழ்சியை போட்டுக் காட்டியதை சொல்லி அங்கிருந்தபடியே காறித் துப்பினான். நமக்கு எதுக்குப்பா அரசியல் என்று 'எம் மகன்' படத்தை வாங்கிப் பார்த்தேன். படம் நன்றாகவே இருந்தது. ஆனால் 'எம்டன் மகன்' 'எம் மகன்' ஆனதால் தமிழ் வளர்ச்சி அடைந்ததா என்று குண்டக்க மண்டக்க நினைத்துப் பார்த்ததன் விளைவுதான் இந்தப் பதிவு.

இந்த பெயர் மாற்றத்தால் ஒரு மண்ணாங்கட்டி வளர்சியும் இல்லை. கலைஞருக்கு நல்ல வருமானம் மற்றும் 80+ வயதிலும் இளைஞராக இருந்து நமீதாவின் கவர்சியை ரசிக்க நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும்.

உண்மையிலெயே தமிழ் மீது கலைஞருக்கு பற்று இருந்திருந்தால் பிற மொழி கலப்பு இல்லாத வசனங்களோடு வரும் படங்களுக்கு வரி விலக்கு என்று அறிவித்து இருக்கலாம். ஐந்து ஆண்டுகள் பிற மொழிக்கலப்பு இல்லாத படங்கள் வெளிவந்தால் பல ஆங்கில வார்த்தைகள் சாதாரணப் பேச்சு வழக்கில் இருந்து அழிந்து போகும். தமிழுக்குப் பல புது வார்த்தைகளும் கிடைக்கும்.

இதில் கருவிகளின் பெயர்கள்,அறிவியல் சொற்கள் ஆகியவைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும். உதாரணமாக 'வாங்க டாக்டர்' என்பதற்கு 'வாங்க வைத்தியரே' என்று சொல்லலாம். 'டீ.வி யை ஆப் பண்ணு' என்பதை 'தொலைக்காட்சியை நிறுத்து' என்று சொல்லலாம். இப்படிச் சிறிது சிறிதாக தமிழ் சொற்களைப் பழக்கத்தில் கொண்டு வரலாம்.

Wednesday, October 11, 2006

யார் மனதில் யார்? அவங்களுக்கு என்ன பெயர்?

G.S.பிரதீப்... தி கிராண்ட் மாஸ்டர். இவர் பெயர்களின் புதையல்.

உலகில் வாழ்ந்த, வாழ்கின்ற பிரபலமானவர்களின் பெயர்களையும் அவர்கள் தொடர்பான செய்திகள் அவர்களைப் பற்றிய தகவல்களையும் தன்னுள் புதைத்து வைத்துள்ளார்.
ஆம் நான் சொல்லிக் கொண்டிருப்பது விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் கிராண்ட் மாஸ்டர் நிகழ்சியைப் பற்றித்தான்.

இது ஒரு மிகவும் அருமையான தொலைக்காட்சி நிகழ்சி.

நிகழ்சியில் கலந்து கொள்பவர்கள் ஒரு பிரபலமானவரை மனதில் நினைத்துக் கொள்ளவேண்டும். கிராண்ட் மாஸ்டர் உங்களிடம் 21 கேள்விகள் கேட்பார்.
அதற்கு ஆம், இல்லை என பதில் சொல்ல வேண்டும். முடிவில் நம் மனதில் உள்ள அந்தப் பிரபலமானவரை அவர் 99 சதவீதம் சரியாகச் சொல்லி விடுவார்.

கிராண்ட் மாஸ்டரால் கண்டறிய முடியாத பெயர்களை நாம் மனதில் நினைத்திருந்தால் நமக்குப் பரிசு இருபத்து ஐந்தாயிரம், ஐம்பதாயிரம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை உண்டு.

நான் கடந்த 10 வாரங்களாக நிகழ்சியைப் பார்த்து வருகிறேன். அதில் அவரால் மார்க்கோபோலோ மற்றும் தமிழ்வாணன்(மணிமேகலை பிரசுரம்)ஆகிய பெயர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த விளையாட்டில் நடுவராக மூன்று பேர் அமர்ந்திருப்பார்கள். நிகழ்சியின் ஆரம்பத்தில் நாம் நினைத்திருக்கும் பெயரை அவர்களிடம் ரகசியமாகச் சொல்ல வேண்டும். அவர்கள் அந்தப் பெயரை அனுமதித்தால் நாம் விளையாடலாம். மேலும் நடுவர்கள் நம்முடைய பதில்களை உடனுக்குடன் சரிபார்த்து , நம் பதில் தவறு என்றால் உடனே எச்சரிக்கை செய்வார்கள்.

இந்த நிகழ்ச்சி ஒரு நம் அறிவுக்குத் தீனி போடும் நிகழ்சியாகும்.

கடையில் நான் சொல்ல வந்ததைச் சொல்ல மறந்து விட்டேன் பாருங்கள். இந்த நிகழ்சியைத் தொகுத்து வழங்குபவர் நடிகை காயத்திரி ஜெயராம். வழு வழுப்பாக அழகாக இருக்கிறார்.குரலும் அழகாக வசீகரமாக இருக்கிறது. இது தான் அவருடைய உண்மையான குரலா அல்லது மாற்றிப் பேசி தொகுத்து வழங்குகிறாரா என்று தெரியவில்லை. அருமை.

லண்டனில் நான் இருந்த போது வேறு வழியே இல்லாமல் சன் டீவியில் கோலங்கள், செல்வி போன்ற கொடுமையான தொலைக்காட்சிகளை நிகழ்சிகளை வேறு வழியில்லாமல் பார்த்தேன்.பெங்களூரில் இப்போது அதில் இருந்து எனக்கு விடுதலை.

தமிழ் தொலைக்காட்சிகளில் விஜய் டீவியில் தான் அருமையான நிகழ்சிகள் இருக்கின்றன.

யார் மனதில் யார்?, ஹட்ச் கலக்கப் போவது யார்?, தீபாவளி கலாட்டா போன்றவைகள் அருமையாக இருக்கின்றன. இவைகளைப் பார்ப்பதற்காகவே அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குச் சீக்கிரம் கிளம்பி விடுகிறேன்.