Saturday, July 15, 2006

அனுபவம் - மிக்சர் - 1

நான் எம்.சி.ஏ படித்துக் கொண்டிருந்த போது எங்கள் கல்லூரியில் பி,ஈ மாணவர்களுக்கும் மாணவிகளுக்கு ஒரு பெரிய பிரச்சினை வந்து விட்டது. வேறெ ஒன்னுமில்லீங்க, நம்ம பசங்க வேலி தாண்டிட்டாங்க. சும்மா, வேலியத் தாண்டி லேடிஸ் ஹாஸ்டலுக்குள்ள போயி மாட்டிக்கிட்டாங்க.

ரெம்ப நாளா இதெல்லாம் ஒரு பிரச்சனையின்னு காலேஜே ரெம்பக் கலங்கிப் போயி இருந்துச்சு.

அப்பத்தான் cultural program நடத்துறக்குப் பிரின்ஸி கூப்டாரு. எப்படியாவது பொண்னுங்களைப் பழி வாங்கிடனும்மா மச்சிகளானுட்டு பசங்களெல்லாம் கிளம்பிட்டாங்க.

cultural programல் கடைசி நாள் பாட்டுக் கச்சேரி. ஒரு பையனும் பொண்ணும் பாட்டு படிகிறாங்க. அது தான் இப்ப நீங்க கேட்டுக்கிட்டு இருகிற பாட்டு.

இந்தப் பாட்டை ஒரு போட்டிக்காக பையனும் பொண்ணும் போட்டி போட்டுக் கொண்டு படிப்பதாக நினைத்துக் கொண்டு கேளுங்கள்.

"திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடான்னு" பசங்க ஆரம்பிக்க
.......
"எங்கூருப் பொண்ணுகள மோப்பமிட வந்தவனை எங்க சீயான் மூக்கறுத்தாக.." ன்னு பொண்னு படிக்க பிள்ளைகலெல்லாம் ஒரு ஆட்டம் ஆடி பின்னெயெடுத்துட்டாங்க.

"நாங்க குளிச்சு அனுப்பி விட்ட கொறட்டாத்துத் தண்ணியில் ஏண்டியம்மா கறி சமைச்சீங்க" ன்னு பையன் பாட

லேடீஸ் ஹாஸ்லகுக்கு தண்ணீர் பசங்க ஹாஸ்டலில் இருந்து தான் போய்க்கிட்டு இருந்தத நினைச்சு ஒரு ஆட்டம் போட்டோம் பாருங்க.

"அட களவானிக் கோத்திரமே காளமாட்டு .த்திரமே" ன்னு படிக்க விசிலு பின்னி பெடலெடுத்துட்த்துட்டோம்.

இனையத்துல இந்தப் பாட்டைக் கேட்டதும் பழைய நினைவெல்லாம் வந்துட்டுதுங்க.


No comments: