Sunday, July 16, 2006

லண்டனில் வலைப்பதிவாளர்கள் சந்திப்பு

டிரிங்.. டிரிங்..
..
"சொல்லுங்க அண்ணே..."
"மகேந்ரா எப்ப வர்ற.."
"இன்னக்கி மதியம் ஒரு மூணு மணியில இருந்து நாலுக்குள்ள வந்துடுறேன்."
"சரி அப்படியே மதன் வந்துருக்கானுல்ல அவனையும் கூட்டிட்டு வந்துரு."
"சரிண்ணே."

இது எனக்கு JK என நான் அழைக்கும் நம்ம ஜெயக்குமாருடன் என்னுடைய உரையாடல், நேற்று ஞாயிறு காலை 11 மணிக்கு

JK வீட்டிற்குள் நுழையும் போது 4.30 மணி.
வீட்டிற்குள் நுழையும் போதே, "எண்ணணே இன்னக்கி நண்டுக் குழம்பா.." என்று கேட்டுக்கொண்டே நுழைந்தேன்.
"இல்லப்பா, உங்களுக்காக prawn பிரியாணி."

அப்படியா ன்னு கேட்டுக் கொண்டே வீட்டில் அவரது குழந்தையுடன் கொஞ்ச நேரம் விளையாடி விட்டு
prawn பிரியாணியும், ஆட்டு ஈரல் வறுவலையும் ஒரு பிடி பிடித்தேன்.

அப்படியே தமிழ்மணத்தின் லேட்டஸ்ட் நிலவரங்களை அவருடன் பகிர்ந்து கொண்டேன்.

"ஏண்ணே இப்ப எழுதுறத விட்டுட்டீங்க?"
"இல்லப்பா, என் குழந்தையுடன் விளையாடுவதற்கே நேரம் சரியா இருக்கு.
எழுதனும்.. ஒரு ஆறு மாதம் ஒரு வருசம் கழிச்சு" என்றார் JK.

அப்புறம் செல்வி, கோலங்கள் போன்ற சீரியல்களில் என்ன கதை இப்போது ஓடிக் கொண்டிருக்கிறது எனக் கேட்டுக் கொண்டேன்.

அப்போது சன் நியூஸில் முத்தையா முரளிதரன் நிருபர்களுக்கு விமான நிலைய வாசலில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தது ஒளிபரப்பானது.

நம்ம லக்கிலுக்கை ரெம்ப விசாரித்தார்.

கொஞ்ச நேரம் கழித்து "அப்படியே நைட் சாப்பாடும் சாப்டுட்டுப் போயிருங்க" என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.
"வந்த நோக்கத்தை கரக்டாக கண்டு பிடிச்சுட்டீங்க போல.." அப்டீன்னு கொஞ்சம் காமெடி பண்ணிவிட்டு...

அவசர வெளி வேலைகள் இருப்பதால் போய்ட்டு வர்றேன் என்று விடை பெற்றோம்.

இப்படியாக லண்டனில் ஒரு வலைப்பதிவாளர்கள் சந்திப்பு இனிதே நிறைவேறியது.


பின் குறிப்பு : JK எனக்கு 1998 ம் ஆண்டில் இருந்து தெரியும். அவர் எனக்கு கல்லூரியில் 2 வருடம் சீனியர்.

No comments: