Friday, May 19, 2006

திராவிடமும் நானும்

தேர்தல் முடிந்து விட்டது எனவே தமிழ்மணத்திலேயும் சூடு குறைந்திருக்கும் எனச் சில நாட்கள் தமிழ்மணத்திற்கு வருகை தராமல் இருந்தேன்.
சில முக்கியமான நிகழ்சிகள் வேகமாக நடந்துள்ளன.
முதலாவது :
நம்ம விஜயகாந்த் போல புதிதாக திராவிடத் தமிழர்கள் இயக்கம் ஆரம்பித்து முத்து & கோ வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றனர். மகிழ்ச்சி.திராவிடன்(ம்) என்ற வார்த்தையை சிறுவயதில் இருந்தே கேட்டு வளர்ந்தவன். ஆனாலும் இதுவரை அதற்குச் சரியான அர்த்தம் எது என்று தேடியதில்லை.எனக்குத் தெரிந்தவரை திராவிடத் தமிழர்கள் என்றால் என்றால் பூர்வீகத் தமிழர்கள் என்று பொருள் கொள்ளலாம் என நினைக்கின்றேன்.நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆசை. உங்கள் குழு அது குறித்து சில பதிவுகள் வெளியிடும் என நம்புகிறேன்.மேலும் என்னைப் பொருத்தவரை இலங்கைத் தமிழர்களும் திராவிடர்கள் என்பதில் அடக்கம். அது குறித்து தங்களின் குழுவின் கொள்கைகள் என்ன என்று விளக்குங்கள். நான் இந்தியன் இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பவன். ஆனால் விடுதலைப் புலிகளை அல்ல.

இரண்டாவது :
நம்ம போலி முதல் முறையாக நேரடியாக மாயவரத்தானிடம் பிடிபட்டது. நான் போலியைத் தடுக்கத் தயாரித்து வரும் மென்பொருளின் முதல் பகுதி என்னிடம் சோதனையில் உள்ளது. என்னுடைய வலைப்பதிவில் பின்னூட்டம் இடுபவர்களிம் ip-address களைச் சேகரிக்கிறேன். அதில் அநாகரிகப் பின்னூட்டம் வந்தால் அந்த ip-adderess களை மட்டும் குறித்துக் கொண்டு மற்றவற்றை அழித்து விடுவேன். என்னுடைய பின்னூட்டச் சாளரத்தில் (ஜன்னல் என்பது போர்துகீசிய வார்த்தையாக்கும்) நீங்கள் ஜோதிகாவை ஒரு பார்வை நீங்கள் பார்த்து முடிப்பதற்குள் உங்களின் ip-address ம், மற்றும் அப்போதய நேரமும் எனக்கு வந்துவிடும். பின்னர் பின்னூட்டச் சாளரம் திறந்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்குத் தகவல் வரும். இது முதல் கட்டம். மென்பொருளின் இரண்டாவது கட்டமும் என்னுடைய நண்பரின் வேறு ஒரு வலைத் தளத்தில் சோதனையில் உள்ளது. இவை இரண்டையும் இணைக்கும் போது நல்ல மென்பொருள் கிடைக்கும் என நினைக்கிறேன்.

இன்று இரவு என் காய்கறிக் கடையின் அடுத்த பகுதியை எழுதிவிட்டு உங்களைச் சந்திக்கிறேன்.

4 comments:

மகேஸ் said...

சோதனை

மாயவரத்தான் said...

:D

நல்லாகீதே மேட்டரு.

குமரன் (Kumaran) said...

ஜோதிகா எங்கேப்பூ என்று கேட்க வந்தேன். கண்டேன். கண்டேன். கண்டேன். கண்ணுக்கினியன கண்டேன். :-)

மகேஸ் said...

தங்களின் வருகைக்கு நன்றி குமரன், மாயவரத்தான் அவர்களே.