Thursday, April 06, 2006

சன் டீ.வி யின் சிறப்புப் பார்வை

இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவது பிடிக்காமல்
யாரோ ஒருவர் யோசிக்காமல் திமுக மீது வழக்குத் தெடர்த்து விட்டால், நீதிமன்றமும் அதனை அவசர வழக்காக ஏற்றுக் கொண்டது என வைத்துக் கொள்வோம் . அப்போது சன் டீ.வியில் என்ன சொல்வார்கள்.

சன் டீ.வின் சிறப்புப் பார்வை வழங்குவோர் சிந்த்தால்.

இன்று திமுக மீது தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்க்கட்சிகள் பொறாமையால் தொடரப்பட்ட வழக்கு. மக்களின் பொதுஅறிவைப் பெருக்க தொலைக்காட்சி அவசியமானது.

1930ம் ஆண்டில் தொலைக்காட்சி கண்டுபடிக்கப்பட்டது முதல் இன்றுவரை அதன் பயன்கள் கணக்கில் அடங்காதவை.
செய்திகள் முதல் சினிமா வரை அனைத்தும் பொது அறிவை வளர்ப்பவை.

உலகத்தில் எது நடந்தாலும் உடனுக்குடன் நமக்குத் தெரிவிப்பது இந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளே.

கிரிக்கட் போட்டி முதல் ஒலிம்பிக் போட்டிகள் வரை நேரடியாக ஒளிபரப்பி அத்தனை நிகழ்சிகளும் பொது அறிவை வளர்ப்பவை

இராமாயணம், மகாபாரதம் போன்ற நிகழ்சிகளை ஒளிபரப்பி ஆன்மீகத்தை வளர்த்வை இந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளே.

அமெரிக்காவில் வாட்டர்கேட் ஊழலை அம்பலப் படுத்தியதும் ஒரு தொலைக்காட்சிதான்.

நாடாளுமன்ற எம்.பி கள் லஞ்சம் வாங்கியதைக் காட்டியதும் தொலைக்காட்சிப் பெட்டிதான்.

சன் டீவியின் சென்றவார உலகம் நிகழ்சியின் மூலம் ஒரு வாரத்தில் உலகத்தில் நடந்ததை அரை மணி நேரத்தில் மக்கள் அறிந்து கொள்ளச் செய்ததும் தொலைக்காட்சிப் பெட்டிதான்.

சித்தி, அண்னாமலை, செல்வி போன்ற தொடர்களை ஒளிபரப்பி மக்களின் அபிமானமான் அந்தஸ்தைப் பொற்று முதல் இடத்தில் இருப்பதும் சன் டீ.வி தான்.

ஆனால் இவைகளை அறியாமல் வாடும் 53 லட்சம் குடும்பங்களின் கதி என்ன?

நாளை பார்க்கலாம்.

4 comments:

மகேஸ் said...

சன் டீவியின் செய்திகள் குறித்த என் முந்தைய பதிவைக் காண

http://mahendranmahesh1.blogspot.com/2005/12/blog-post_16.html

VSK said...

Good one!
Let us have some originals from you!

மகேஸ் said...

கருத்துகளுக்கும் நன்றி பாரதி,sk மற்றும் மோகன்காந்தி.

சிவமுருகன் said...

நல்ல சிந்தனை. அழகா? ஆர்வமா? ன்னு ஒர் பட்டி மன்றம் நடத்தலாம்.